Thursday, April 27, 2017

வனநாயகன் குறித்து(5) - அம்ருதாவில் சுரேஷ் கிருஷ்ணன்

கலை இலக்கிய விமர்சகர்  "சுரேஷ் கிருஷ்ணன்" நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய ஆளுமை. அவர் வனநாயகன் குறித்து
"காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்" எனும் தலைப்பில்  எழுதிய கட்டுரை அம்ருதா – மார்ச் 2017 இதழில் வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் வாசியுங்கள்.


அவருடைய முகநூலில் இருந்து..

//
சமீபத்தில் நான் வாசித்த சுவாரசியமான புதினம் – வனநாயகன்.
நண்பர் ஆரூர் பாஸ்கரின் இரண்டாவது நாவல். ஐ.டி பின்னணியில் நிகழும் ஒரு திரில்லர். களம் மலேசியா. திரில்லரின் பாவனையில் இயங்கினாலும் மலேசியாவின் கலாசாரம் உள்ளிட்ட பற்றிய பல்வேறு விதமான விஷயங்கள் நாவலின் இடையில் உறுத்தாமல் பதிவாகியிருக்கின்றன.
இந்தப் புதினத்தைப் பற்றி அம்ருதா – மார்ச் 2017 இதழில் ஒரு மதிப்புரை எழுதியுள்ளேன்.
**
ஆரூர் பாஸ்கரின் முந்தைய நாவலைப் பற்றி ‘அலமாரியில்’ நான் அத்தனை சிலாக்கியமாக எழுதவில்லை. ஆனால் அதற்காக பாஸ்கர் என்னை எதிரியாக கருதிக் கொள்ளவில்லை, வசை பாடவில்லை. ‘இதோ அடுத்ததில் நிரூபிக்கிறேன்’ என்று ஒரு பாய்ச்சல் காட்டியிருக்கிறார். படைப்பாளிகள் கொள்ள வேண்டிய நேர்மறையான எதிர்வினையும் உத்வேகமும் இதுவே.
பாஸ்கர் இன்னமும் மேலே முன்னே நகர என் வாழ்த்துகள்.

//

மனம் நிரம்பிய நன்றிகள்- சுரேஷ் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment