Sunday, September 25, 2016

இவர்கள் வாசகர்கள்-4

நண்பர்களே,  எனது இரண்டாவது புதினம் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை கேட்கிறது.  போன வாரம்
ஒரு வழியாக  எழுத்துப்பணி நிறைவடைந்து இந்த வாரம்
பிழைத்திருத்தத்தில் இருக்கிறேன். முழுதாக முடிந்ததும் சொல்கிறேன்.

"இவர்கள் வாசகர்கள்" பகுதியில்  "பங்களா கொட்டா" புதினம்
பற்றி  குமுதம் புகழ் நண்பர் சுரேஷ் கண்ணன் அவரகளின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.  நான் முன்பே சொன்னது போல வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்களின் முன் வைக்கிறேன்.

வாசகர்களின் பரந்துபட்ட கருத்துகளால்,  நான் ஒரு படைப்பாளியாக நிறைய கற்றுக் கொள்கிறேன் என சொல்லிக் கொள்வதில் மிகையோன்றுமில்லை.

***********

நண்பர் ஆரூர் பாஸ்கர், அவருடைய நாவலான 'பங்களா கொட்டா'வை அனுப்பித் தந்தார்.
அது பற்றிய விமர்சனக் குறிப்பு, புத்தக மதிப்புரைகளுக்கென வெளிவரும் பிரத்யேக மாத இதழான 'அலமாரி'யில் வெளிவந்துள்ளது.
நண்பருக்கு வாழ்த்துகள்.

அலமாரி  (கிழக்கு பதிப்பகம்)





பங்களா கொட்டா வை வாசித்து கருத்துகளைச் சொன்ன சுரேஷ் கண்ணனுக்கு எனது நன்றிகள்!!

No comments:

Post a Comment