Thursday, January 7, 2016

தமிழ்மணம் நிலைக்குமா?

சில மாதங்களாகவே ஓரு கேள்வியை பதிவர்கள் பலர் என்னிடம் வேவ்வேறு மாதிரி கேட்டுக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் பயன்படுவது போல் அதை பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி என்ன நம்மிடம் பெரிதாக கேட்டுவிட முடியும். ஓன்னுமில்லை.   சமீபகாலங்களில் பெரும்பாலனவர்கள் முகநூல் பக்கம் தாவுகிறார்களே?, பிளாகரில் நடமாட்டம் குறைகிறதே? தமிழ்மணம் நிலைக்குமா? என்பதுதான் கேள்வி.


அது உண்மைதான். மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை. பிளாகரில் இருந்து முகநூலுக்கு தாவல்கள் அதிகரித்துள்ளன. அப்படித் தாவ பல காரணங்கள் இருக்கின்றன. அதை விரிவாக அன்பர் முரளிகூட அலசி இருக்கின்றனர் இணைப்பு கீழே.

http://www.tnmurali.com/2016/01/blogging-facebook-comparison.html

முகநூலும், பிளாகரும் வேறு வேறு வகையான பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டது. சுருக்கமாக எனது கருத்துகளை சொல்லிவிடுகிறேன்.

பிளாகர் போலின்றி முகநூல் கவர்சிகரமானதுதான். உடனடி கருத்துகள், பகிர்தல்,விருப்பமிடுதல், புகைபடங்கள்,காணோளி,மொபைல் பயன்பாடு இப்படி பல விஷயங்கள். இந்த தாவல் கண்டிப்பாக தடுக்க முடியாதது தான்.

ஆனால் பிளாகை மொபைல் போனில் பயன்படுத்த இயலாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது முற்றிலும் உண்மையில்லை. ஐஃபோன் மற்றும் அண்டிராடியில் blogger app ஐ நீங்கள்  தரவிரக்கம் செய்ய இயலும். இந்த செயலியில் நீங்கள் பிளாக் எழுதலாம், மற்றவர்களுடைதையும் பார்கலாம். இந்த செயலியை googleலே தருகிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.


பிளாகர் தேய அல்லது தேய்வது போல தெரிய இன்னோரு முக்கிய காரணம் இருக்கிறது. அது நாமெல்லாம் மறந்துவிட்ட ஒன்று திரைமணம்.

ஆம், திரைமணம் வந்தபின்பு சினிமா பதிவர்களும், பிரியர்களும் தமிழ்மணத்தை கண்டு கொள்வதில்லை. அதனாலேயே சமீபகாலங்களில் மற்ற பதிவுகளுக்கு பார்வைகள் குறைந்துள்ளது.

இப்போது தமிழ் மணத்துக்கு வருபவர்கள் கொஞ்சம் சீரியஸ் பதிவர்களும் அதற்கான வாசகர்களும் தான். அவர்களும் நண்பர்களிடம் உள்ள புரிதலில் தான் எழுதுகிறார்கள். அதாவது மாற்றி மாற்றி கருத்திடுவது எனும் நிலைதான். அதனால், புதிதாக வருபவர்களின் பாடு திண்டாட்டம் தான். சில நாட்களில் தாக்கு பிடிக்காமல் அவர்களும் முகநூல் பக்கம் போக வாய்ப்புகள் அதிகம். எனவே புதியவர்களை ஊக்குவிப்போம்.


அப்படி என்றால் பிளாகரின் எதிர் காலம் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்.

எழுத்தில் எப்போதும் இரு வகை உண்டு.  ஒன்று நிறுத்தி நிதானமாக எழுதப்படுவது. இதில் அடர்த்தி அதிகம்,  இலக்கியத் தரமானது. படிக்க பொறுமையும் நிதானமும் வேண்டும்.
ஜெயமோகன்,சாரு போன்றவர்களுக்கானது. இவர்கள் இன்னமும் பிளாக் அல்லது வலைதளத்தில் தான் இருக்கிறார்கள். அப்படித்தான் எதிர்காலங்களிலும் தொடர்வார்கள். மாற்றமில்லை.   இதற்கு வாசகர்கள் குறைவு. ஆனால் தேடிப் போய் அதை படிப்பார்கள்.

இரண்டாவது பாப்புலர் அல்லது ஜனரஜ்சக எழுத்து - எளிமையான நடை. அனைவருக்குமானது. ஆனந்தவிகடன், குமுதம் வகையரா.  இந்த எழுத்துதான் சில காரணங்களுக்காக முகநூலிலும்,பிளாகிலும் பிரிந்து கிடக்கிறது.  அதற்கான காரணங்கள் வசதி, அங்கிகாரத்தை தாண்டியது என நினைக்கிறேன்.

உதாரணமாக- 

நண்பர் செந்தில் தற்போது  நீர் மேலாண்மை பற்றிய பதிவு ஓன்று எழுதிக்கொண்டிருக்கிறார்.

http://senthilmsp.blogspot.com/2015/12/8.html

இதுபோல கொஞ்சமேனும் ஆழ்ந்து படித்துப் புரிந்துக் கொள்ளவேண்டியதை கண்டிப்பாக வலைபதிவில் மட்டுமே விளக்கமான எழுத்தில் சொல்ல இயலும்.

இன்னோரு உதாரணம். முகநூலில் ஓருவர் ஜல்லிகட்டு சம்பந்தமாக இந்த புகைபடத்தை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவை நூற்றுக்கணக்காணவர்கள் விரும்பியிருக்கிறார்கள், 35 பேர் மற்றவர்களிடம்  பகிர்ந்திருக்கிறார்கள். இவையெல்லாம்
உடனடியாக சில நொடிகளில் நடந்து, நூற்றுக்கணக்கானவர்களின் கண்களைத் தொட்டிருக்கிறது. அதே முகநூலில் பிரபலமாகாத ஓருவர் சீரியசான விஷயங்களை எழுதினால் எத்தனை பேர் வாசிப்பார்கள் என்பது சந்தேகமே.

 'நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்' என்றுச் சொல்வது போல செய்தி அல்லது கருத்தின் உள்ளடக்கமே நமது ஊடகத்தைத் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.  மேலே சொன்ன இன்ன பிற காரணங்களுக்காக பிளாகும் தமிழ்மணமும் நிலைக்கும்.


எந்த ஓரு படைப்பாளியும் தனது படைப்பிற்கான நியாயமான அங்கிகாரத்தை எதிர்பார்பது தவறோன்றுமில்லை.  நாமும் மனிதர்கள் தானே.? நான்கு பேர் நாம் எழுதுவதை படித்து அதை பாரட்டவோ இல்லாவிட்டால் திட்டவாவது செய்யவேண்டாமா ? சொல்லுங்கள்.

 மாற்றத்துக்கு தகுந்தாற்போல, உங்கள் வாசகர்களுக்கு ஏற்றதோரு ஊடகத்தை தேர்ந்தேடுங்கள் என்பதே எனது கருத்து.

உங்கள் கருத்துகளையும் பகிருங்கள். நன்றி!

1 comment: