Sunday, January 10, 2016

ஆம்னிபஸ் - தெரியுமா?

நண்பர்களுக்கு 2016ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் 2015ஐயும் நான் திரும்பி பார்கிறேன். கடந்த ஆண்டு நான் செய்த ஓரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அது புத்தக வாசிப்பு.

இணையத்தில் எந்தவித இலக்கும்  இல்லாமல் முகநூல், டிவிட்டர், செய்தித்தாள் என மேயாமல்  செய்த உருப்படியான விஷயம் அது. உண்மையாகவே நிறைய நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறேன். அதில் பெரும்பாலானவை தமிழ் புத்தகங்கள்.

முக்கியமாக வாசிப்பதோடு நிற்காமல் வாசித்த புத்தகங்களை விமர்சித்தும்  எழுதியிருக்கிறேன். அதை விமர்சனம் என்பதை விட கருத்துன்னு சொன்னால் சரியாக இருக்கும். அவற்றில் சில எனது வலைதளத்தைத் தாண்டி  இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது.

நான் கடந்த வருடத்தில் (2015) நான் எழுதிய விமர்சனங்களின் தொகுப்பு இங்கே.

1) காற்றின் கையெழுத்து - கவிஞர் பழநிபாரதி
http://aarurbass.blogspot.com/2015/02/blog-post_19.html

2) தென்றல் வந்து தீண்டும்போது... (அமேரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் மாத இதழ் பற்றி)
http://aarurbass.blogspot.com/2015/03/blog-post_23.html

3) சிறகு முளைத்த விரல்கள் - ஆருர் புதியவன்
http://aarurbass.blogspot.com/2015/05/blog-post_29.html

4) லென்ஸ் வழியான வாழ்க்கை - ஆனி லெய்போவிட்ச்
http://aarurbass.blogspot.com/2015/05/blog-post.html

5) சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
http://aarurbass.blogspot.com/2015/07/blog-post_23.html

6) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
http://aarurbass.blogspot.com/2015/08/blog-post.html

7)சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்
http://aarurbass.blogspot.com/2015/09/blog-post_20.html

8)  Tuesdays with Morrie - Mitch Albom
http://aarurbass.blogspot.com/2015/09/blog-post.html

    புத்தக வாசிப்பைத் தாண்டி அதன் விமர்சனத்துக்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்பது புரிந்துக்கொள்ளக் கூடியதே.  ஓரு சினிமாவை பார்த்தபின் குறை நிறைகளை அல்லது பிடித்த விஷயங்களை நண்பர்களிடம் விவாதிக்கிறோம் இல்லையா அது போலதான் இதுவும்.

    அதையும் தாண்டி, எந்த ஓரு படைப்பாளியும் தனது படைப்புகளைச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான ஓரு விமர்சனத்தையும், அங்கீகாரத்தையும் கண்டிப்பாக எதிர்பார்கிறான். 

    அதனால் ஓரு வாசகனாக நமது கருத்து அல்லது விமர்சனம் சக வாசகனைத் தாண்டி  அந்த படைப்பாளியையும் சென்று சேர்கிறது.

     நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ புத்தகங்களைக் கடந்து வருகிறோம். ஆனால், அதை விமர்சித்து எழுதுபவர்கள் நம்மில் மிகக் குறைவு. உருப்படியாக எழுதுபவர்கள் அதிலும் குறைவு. அப்படிபட்ட தரமான விமர்சனங்களை எங்கே படிக்கலாம்?.

     இந்தத் தருணத்தில் ஆம்னிபஸ் தளம் ஓரு சிறிய அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.

     தினம் ஒரு தரமான புத்தக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 வாக்கில் தொடங்கபட்டு இயங்கி வருவது ஆம்னிபஸ் தளம். அதன் இணைப்பு இங்கே.

http://omnibus.sasariri.com/

    புது வெளிச்சத்தின் சிறு கீற்றாவது பாய்ச்சக்கூடிய நூல் அறிமுகங்கள் செய்ய முயற்சித்து வருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
 
    ஆம்னிபஸ் தளம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்து அப்படியே.

//"இங்குள்ள அச்சு ஊடகங்கள் தீவிர வாசிப்பு என எதற்குமே இடமளிக்காத சூழலில் இணையம் வழியாகவே நல்ல நூல்களை நாம் அடையாளம் காணமுடியும். ஆம்னிபஸ் என்னும் இணையதளம் அவ்வகையில் மிக முக்கியமானது. அதில் மட்டுமே இன்று தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன"//

     ஆம்னிபஸ் தளம் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் அதைப் பார்வையிடலாம்.  எழுதும் ஆர்வமிருப்பவர்கள் உங்கள் நூல் விமர்சனங்களுடன் ( கொஞ்சம் விரிவாக 500 சொற்களில்) அவர்களை அணுகலாம்.

     என்னிடம் இந்த வருடமும் ஆம்னிபஸ் தளத்திலிருந்து  விமர்சனங்களைக் கேட்டிருக்கிறார்கள். முயற்சிப்போம்.

     2015 தாண்டி மேலும் பல புத்தகங்களை வாசித்து 2106லும் எழுதும் ஆர்வமிருக்கிறது. நான் ரெடி அப்ப நீங்க? ;)

No comments:

Post a Comment